Home இலங்கை “யார் வெற்றிபெறவேண்டும் என்பதில், எமக்கு அக்கறை இல்லை”

“யார் வெற்றிபெறவேண்டும் என்பதில், எமக்கு அக்கறை இல்லை”

by admin

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் பாதிக்கப்படலாம் எனவும் எனவே தற்போதைய நெருக்கடிக்கு இலங்கையின் அரசியல் தலைவர்களை உடனடியாக தீர்வு காணுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் சகா மற்றும் நட்பு நாடு என்ற அடிப்படையில் அரசியல் நெருக்கடிக்கு உடனடியான வெளிப்படையான ஜனநாயக வழிமுறையிலான தீர்வை காணுமாறு தாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் மோதலில் யார் வெற்றிபெறவேண்டும் என்பது குறித்து தாங்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர் அரசமைப்பு நடைமுறைகளை மதிக்கும், வெளிப்படையான, சட்டபூர்வமான அரசாங்கத்தை உருவாக்கும் முடிவையே தாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More