Home இலங்கை ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி….

ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி….

by admin

ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல் எனும் தொனிப் பொருளில் றைஸ் சிறீலங்கா மற்றும் இலங்கை மெதடிஸ்த திரு அவையின் வட கிழக்கு மறை மாவட்டம் என்பன இணைந்து இந்த பேரணியை நடாத்திஉள்ளன.

மட்டக்களப்பு நகரின் காந்திப்பூங்காவுக்கு முன்பாக இடம் பெற்ற இந்தப் பேரணியில் சமயப் பிரமுகர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் ஜனநாயகத்தை வலியுறுத்துவதுடன் நிலையான அமைதியும் நிரந்தரமான சமாதானமும் ஏற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள அவர்கள் தாய் நாட்டின் நற்பெயரையும் ஜனநாயகத்தையும் கீழ் மட்டத்திற்கு கொண்டு வந்த வன்முறை அரசியல் கலசாராத்தினையும் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டோர் இலங்கையின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான வரையறைகளுக்கு அப்பால் நடந்து கொண்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கமாறு கோருவதாக தெரிவித்து கையொப்பங்களையும் வைத்ததுடன், சுலோகங்களையும் தாங்கி நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More