Home இலங்கை இரணைமடுவுக்கு சென்ற சிறிதரன் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை….

இரணைமடுவுக்கு சென்ற சிறிதரன் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்து அபிவிருத்தி செய்யப்பட்டபின் குளத்தினை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (07.12.18) இடம்பெற்றது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி பிரசன்னமாவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே நிகழ்வு இடம்பெற்ற இரணைமடுகுளத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஜனாதிபதியுடன் நிகழ்வில் கலந்து கொள்ளாது பொது மக்கள் கூடியிருந்த இடத்திலேயே நின்றதுடன், ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்தவுடன் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கரைச்சி மற்றும் பளை பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதற்கிடைய வட மாகாண பணிப்பாளர், மாவட்ட அரச அதிபர் ஆயேரர் நிகழ்ச்சியில் கலந்துகோள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் சென்று கோரிய போதும் அவர் மறுத்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More