Home இந்தியா மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழக ஆளுனர் பிரதமரிடம் எடுத்துரைப்பு

மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழக ஆளுனர் பிரதமரிடம் எடுத்துரைப்பு

by admin

இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார. கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையகத்திடம் வழங்கிய நிலையில் அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக சட்டசபையில் கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நேற்றுமாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இதன்போது மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More