Home இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணிகள் வழங்கப்படாமையை கண்டித்து சுவரொட்டிகள்

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணிகள் வழங்கப்படாமையை கண்டித்து சுவரொட்டிகள்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை துணிகள் வழங்கப்படாமையினால் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 81 பாடசாலைகளில் சுமார் 32, 755 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் இவர்களின் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்கள். இந்த மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடசாலை சீருடைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இலவச சீருடைத்துணிகளை நம்பியே இருக்கின்றனர். இந்த நிலையில் இவ்வருடத்திற்கான இலவச சீருடைத்துணிகள் வழங்கப்படாமையினால் புதிய சீருடைகளை தைத்துக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

வழமையாக இலவச சீருடைத் துணிகள் வழங்கப்பட்டாலும் பெரும்பாலான மாணவர்கள் புதிய சீருடைகளை தைத்துக்கொள்வதற்கு கூட பணம் இன்றி சிரமப்படுகின்ற நிலையில் இவ்வருடம் இதுவரைக்கும் சீருடைத்துணிகளே வழங்க்கப்படவில்லை எப்போது வழங்க்கப்படும் என்றும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என கல்வித்திணைக்கள அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலவச சீருடை வழங்க்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More