Home சினிமா பா.இரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

பா.இரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

by admin


இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநரான பா.இரஞ்சித், தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தயாரித்த ரஞ்சித் தற்போது  ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படத்தை தயாரிக்கின்றார்.

ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பட வேலைகளில் தற்போது பா.இரஞ்சித் ஈடுபட்டு வருகிறார்.  ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்க, கதிர், ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர். சாதி வேறுபாட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.

பெரும்பாலானவர்கள் கொண்டாடிய இந்தப் படம், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது. வருகிற 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிடப்படவுள்ளது.

இந்நிலையிலேயே, தன்னுடைய தயாரிப்பில் இரண்டாவதாக உருவாகும் படத்தின் முதல் சுவரொட்டியை (ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை) வெளியிட்டுள்ளார் இயக்குனர் பா.இரஞ்சித். ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தில் தினேஷ்  கதாநாயகனாக  நடிக்க, அதியன் ஆதிரை இயக்குகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, டென்மா இசையமைக்கின்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More