Home இலங்கை நானாட்டானில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்வதனால் மக்கள் விசனம் :

நானாட்டானில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்வதனால் மக்கள் விசனம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களினுள் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து உட் செல்லுவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.

மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை குறித்த பகுதிக்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.  இந்த கலந்துரையாடலின் போது அச்சங்குளம் பகுதியில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து மக்கள் குடியிறுப்பு பகுதிக்குள் வருவதாக அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் அச்சங்குளம் கிராமம் தாழ்வான கடற்கரைப் பகுதி என்பதால் மழைக் காலங்களில் முருங்கன் உற்பட பல கிராமங்களில் இருந்து வரும் கழிவு நீரும் கடல் நீர் ஓடை வழியாக வரும் நீரும் வீதிகளை அரித்து வீடுகளுக்குள் சென்று விடுகிறது.

இதனால் நோய் தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதோடு தென்னை மற்றும் பயன்தரும் மரங்களும் பாதிக்கப்படுவதோடு பாடசாலை மாணவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள், முதியவர்களும் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் ஊடாக குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More