Home இலங்கை டெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார்

டெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று, பரீட்சை எழுதி செல்கிறார். யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, இவ்வாறு டெங்கு பாதிப்பின் மத்தியிலும் க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதி வருகிறார்.

இவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகியதனையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு தயாராகியிருந்த அந்த மாணவி, டெங்கு தொற்றால் பரீட்சை எழுதும் வாய்ப்பை கைவிட தயாராக இருக்கவில்லை.

இதனையடுத்து பரீட்சை எழுதப் போவதாக கோரிக்கை விடுத்திருந்தார். அவரது உடல்நிலையை ஆராய்ந்த வைத்தியர்கள், வைத்தியசாலையில் தங்கியிருந்தபடியே பரீட்சை எழுத அனுமதித்தனர். இதற்காக வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அவரை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து சென்று, பரீட்சை முடிந்ததும் மீண்டும் வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி மூலம் அழைத்து செல்கின்றனர்.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.