Home இலங்கை TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..

TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..

by admin

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்திருந்தன.

இந்த வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் ஆதரவாக் வாக்களித்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12.12.18) பகல் 1 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இந்த பிரேரணையை சமர்பித்திருந்ததுடன், மங்கள சமரவீர ஆமோதித்து வழிமொழிந்தார். எனினும் இன்றைய பாராளுமன்ற அமர்வினையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் புறக்கணிக்கனித்திருந்தனர்

Spread the love
 
 
      

Related News

2 comments

[email protected] December 12, 2018 - 10:34 am

ஏன் கூட்டமைப்பின் 14 வாக்குகளைக் கழித்தாலும் ரணில் வெற்றி பெற்று இருக்கமாட்டாரோ??

Reply
Siva December 12, 2018 - 11:03 am

திரு. ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணை வெற்றியடைந்தமை குறித்து அவர்
திருப்திப்படுவதில் வியப்பில்லை. ஆனால், சில UNP பிரதிநிதிகள் உட்படப் பல பா. உறுப்பினர்கள் இப் பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்தமைக்கான முதன்மைக் காரணம், ஜனாதிபதியின் தனிநபர் விரோத/ பதவிப் பேராசை காரணமாகவும், அவர் மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாகவும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவுமேயாகும் என்பதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமர் குறிப்பிட்டது போல், அரசின் நடவடிக்கைகளில் காணப்பட்ட தடங்கல்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் UPFA அங்கத்தவர்களின் ஒத்துழைப்பின்மை காரணமென்பதை மறுப்பதற்கில்லை. மாறாக, அவர்களுக்குரிய நியாயமான ஒத்துழைப்பைப் பிரதமர் வழங்கினாரா, என்பதும் கேள்விக்குரியதே!

பிரதமர் மீது தவறிருந்தால், பாராளுமன்ற நியதிப்படி அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்துச் சுமுகமாக இயங்கிக் கொண்டிருந்த அரசை முடக்கியது, ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான/ முட்டாள்தனமான நடவடிக்கையே. அது கண்டிக்கப்பட வேண்டியதே! ஒரு பிரதமர் செய்த தவறுக்கு, தவறே(?) செய்யாத, ஜனநாயகப்படி தெரிவு செய்யப்பட்ட ஏனைய அமைச்சர்களையும் அங்கத்தவர்களையும் முடக்கியது, எந்த வகையிலும் ஏற்புடையதன்று. தனது முன்யோசனையற்ற ஒரு சிறு தவறைத் திருத்த முன்வராது மேன்மேலும் தவறிழைத்த/ இழைக்கின்ற ஜனாதிபதி, அப்பதவிக்கு எந்த வகையிலும் பொருத்தமற்றவரேயென்றால் அது மிகையில்லை. 3 1/2 வருடங்கள் பொறுத்த ஜனாதிபதிக்கு மேலும் ஒரு வருடம் பொறுத்திருக்க முடியாது போனமையானது, நாட்டுக்கு மிகப் பெரிய அபகீர்த்தியையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தியிருப்பது குறித்து இன்னும் கரிசனை கொள்ளாதிருப்பது, மிகுந்த கண்டனத்துக்குரியது.

மேலும், வர இருக்கும் நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக இருந்தால், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினூடான பொதுத் தேர்தலொன்றுக்கு அவர் செல்ல இருப்பதான கருத்தொன்று மக்களிடையே நிலவுகின்றது. சர்வஜன வாக்கெடுப்பு, பொதுத் தேர்தலென்பதேல்லாம் நாட்டுக்கு எவ்வளவு சுமையை ஏற்படுத்தப்போகின்றன, என்ற சிறு அறிவு கூட அற்றவரா நமது ஜனாதிபதி?

ஜனாதிபதி தான் செய்த தவறைத் தானே சரிசெய்ய முன்வருவாரானால்,ஒக்ரோபர் 26 ம் திகதிக்கு முன்பு இருந்த அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தி அரசை மேலும் ஒரு வருடத்துக்கு கொண்டு செல்வதே பொருத்தமானதாகும். நான்கரை வருடங்கள் முடிகின்ற வேளையில், அரசியல் சாசனப்படி அவர் அரசைக் கலைக்க விரும்பினால், அது குறித்து எந்த எதிர்ப்பையும் யாரும் காண்பிக்கப் போவதில்லை. சிந்திப்பாரா?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More