Home இலங்கை மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மனித புதைகுழி தொடர்பாக பலரும் தற்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பல்வேறு நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் நேரடியாக மன்னார் மனித புதைகுழிக்கு வருகை தந்து உண்மை நிலவரங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கின்றனர்.

இந்த நிலையில் மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் புதன்கிழமை (12) 116 ஆவது நாளாக இடம் பெற்றதன் பின்னர் p நேற்று வியாழக்கிழமை மற்றும் இன்று வெள்ளிக்கிழமை ,டம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ளமையினாலேயே மேற்படி அகழ்வு பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் குறித்த அகழ்வு பணியானது வருகின்ற திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்படடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதை குழியில் இருந்து இது வரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்;பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More