Home இலங்கை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..

by admin

எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளதாகவும் இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளதோடு ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த பலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் சிலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக அரியவருகின்றது.

மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந் நிலையில் துமிந்த திஸநாயக்க தலைமையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான மகிந்த சமரசிங்க, தயாசிறி ஜயசேகர, பைஸர் முஸ்தப்பா உள்ளிட்ட 9 க்கும் மேற்பட்ட நபர்களே ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இணைய உள்ளனரர் எனத் தெரிவிக்க்பபட்டுள்ளது

இவ்வாறு இணைய உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குவது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றிரவு அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து எதிர்வரும் மணித்தியாலங்களில் இலங்கை அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் இடம்பெறலாம் என்பது தற்போது காணப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More