Home இலங்கை 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய நத்தார் விழா நாளை மன்னாரில்

2018 ஆம் ஆண்டிற்கான தேசிய நத்தார் விழா நாளை மன்னாரில்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வருடா வருடம் தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வானது இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெறவுள்ளது.

வடக்கில் அதிக கிறிஸ்தவ சமயத்தை சார்ந்த மக்களை கொண்ட மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் ஒன்று. அந்த வகையில் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய நத்தார் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தகம், நுகர்வோர், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கிறிஸ்துவ மத அலுவல்கள் அமைச்சும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் அரச நத்தார் கொண்டாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை 16 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ளது.

வர்த்தகம், நுகர்வோர், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கிறிஸ்துவ மத அலுவல்கள் அமைச்சின் அழைப்பின் பேரில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் வின்ஸ்டன் பர்னாந்து ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர்.இம்மானுவேல் பர்னாந்து ஆண்டகை ஆகியோரின் பங்கு பற்றுதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இவ் விழா இடம் பெறவுள்ளது.

இவ் விழாவில் இலங்கை முழுவதிலும் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More