இலங்கை பிரதான செய்திகள்

பாராளுமன்றம் கூடுகிறது – பிரதமருக்கு ஆசனம் ஒதுக்கீடு – எதிர்க்கட்சித் தலைவர் யார்?


பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன் இன்றைய தினம் பொதுமக்கள் பார்வையாளர் கலரி மற்றும் சபாநாயகர் விசேட விருந்தினர் கலரி என்பவற்றைத் திறப்பதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்ர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாதக் காரணத்தினால் பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைய, ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலானது வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைய பாராளுமன்றத்தில் பிரதமருக்கு மாத்திரம் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லையென்பதுடன், பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பது குறித்து சபாநாயகர் பெயரிடுவாரென்றும் பாராளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.