Home இலங்கை வடக்கு கிழக்கை இணைக்க இடமளிக்கப் போவிதில்லை – மீண்டும் முருங்கை மரத்தில் JVP…

வடக்கு கிழக்கை இணைக்க இடமளிக்கப் போவிதில்லை – மீண்டும் முருங்கை மரத்தில் JVP…

by admin

வடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் பிரேரணையை வழிமொழிந்து நேற்று (18.12.18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய விஜித ஹேரத், “நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக பாராளு மன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை நீக்கியமையால் தான், இன்று நாடாளுமன்றத்தில் செயலாற்றக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

மேலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, நிறைவேற்று அதிகாரம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது என்பதை நிரூபித்து காட்டியுள்ளது. இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் இல்லாவிடின் நாட்டில் பிளவுகள் தோன்றுமென பெரும்பாலான அரசியல் கட்சி உறுப்பினர்கள் கூறினர். ஆனால் தற்போது நிறைவேற்று அதிகாரத்தினால்தான் அவை அனைத்தும் ஏற்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மையினரை பாதுகாக்குமென மக்கள் எண்ணினர். ஆனால் அதன் உண்மை நிலையினை தற்போது நன்கு உணர்ந்திருப்பார்கள்.

13ஆவது திருத்தத்தில் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டது. ஆனால் அவை பலவந்தமாக இணைக்கப்பட்டதாக கூறி, உயர் நீதிமன்றத்தின் ஊடாக அதனை ஜேவிபி பிரித்தது. இதனால் மீண்டும் வடக்கு- கிழக்கை இணைக்கும் செயற்பாட்டுக்கு ஜேவிபி ஒருபோதும் இடமளிக்கமாட்டாது என்பதுடன் நாட்டை பிளவுபடுத்தவும் அனுமதிக்காது எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More