Home இலங்கை மகிந்த கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு..

மகிந்த கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு..

by admin

மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் இனப்படுகொலை குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என கோத்தாய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மிலிந்த ராஜபக்ச தனது டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புலம்பெயர் புலிகளின் சட்டத்தரணிகள் இனப்படுகொலை குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் சுமத்தவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

சிவானி தியாகராஜா என்ற சட்டத்தரணியே இதற்கு தலைமை தாங்குகின்றார் எனவும் தெரிவித்துள்ள மிலிந்த ராஜபக்ச முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா உட்பட யுத்தத்தின் இறுதி தருணங்களில் முப்படைகளின் தளபதிகளாக பணியாற்றியவர்களிற்கு எதிராகவும் இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More