Home இலங்கை ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாள்..

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாள்..

by admin

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நாளை முல்லைத்தீவின் பல்வேறு இடங்களில்  ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டு உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாளான இன்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

அந்தவகையில் வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் காலை 8.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலய வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திலும் காலை 8 மணிக்கு விசேட ஆராதனைகளும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை மாலை 4 மணிக்கு முள்ளியவளை கயட்டை பகுதியில் உள்ள நினைவாலயத்திலும் நினைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. எ உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் அணிதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More