Home இலங்கை யாழிலிருந்து கஞ்சா போதை பொருள் கடத்தியர் கைது

யாழிலிருந்து கஞ்சா போதை பொருள் கடத்தியர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழிலருந்து கஞ்சா போதை பொருளை கடத்தி சென்ற சந்தேக நபர் ஒருவரை காவல்துறை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளதுடன் கடத்தி செல்லப்பட்ட 31 கிலோ கிராம் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

யாழ்.அரியாலை பூம்புகார் பகுதியில் இருந்து கஞ்சா போதை பொருள் கடத்தப்படுவதாக யாழ். காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடி படையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற வாகனத்தை வழி மறித்து சோதனையிட்டனர்.

அதன் போது வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 31 கிலோ கஞ்சா போதை பொருளை மீட்டுள்ளனர். அதனை அடுத்து சந்தேக நபரை கைது செய்ததுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

குறித்த சந்தேக நபர் , அவரிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்வற்றை யாழ்ப்பாண காவல்முதுறையினரிடம் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாண காவல்துறையினர் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More