Home இலங்கை வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி பெற்று தருமாறு கடிதம்

வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி பெற்று தருமாறு கடிதம்

by admin

வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி பெற்று தருமாறு கடிதம் கோரி தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்கு வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெடுக்குநாறி மலையில் அமைந்தள்ள ஆதி சிவன் ஆலயம் மேற்படி விடயம் தொடர்பாக அதி உத்தம ஐனாதிபதி மற்றும் கௌரவ பிரதம மந்திரி ஆகியோருக்கு எம்மால் எழுதப்பட்ட 19.10.2018 ஆம் திகதிய கடிதத்தின் நிழற்பிரதியும் வட மாகாண கௌரவ ஆளுநருக்கு நாம் எழுதிய 01.11.2018 ஆம்; திகதிய கடிதத்தின் நிழற்பிரதியும் ,த்துடன் இணைக்கப்படுகின்றன.

கௌரவ வட மாகாண ஆளுநர் அவர்களால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா பிரதேச பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆகியோருக்கு எழுதிய 07.11.2018 ஆம் திகதிய கடிதத்தின் நிழற்பிரதியும் ,த்துடன் ,ணைக்கப்படுகின்றது.

,ந்த விடயத்தில் தங்களது மேலான அவதானத்தை கோருவதுடன் ,ந்த ஆலயத்திற்கு செல்வதற்கான ஏணி பொருத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் பொலிஸ் திணைக்களத்தினூடாக தடை ஏற்படுத்துவதை நிறுத்தி ,தற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More