93
வத்தளை, குனுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக கட்டடத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக 10 சிறிய கடைகள் முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலையிலேயே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சில நபர்கள் தமது கடைகள் மீது திட்டமிட்டு தீமூட்டியுள்ளதாக கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Spread the love