Home இலங்கை சீனாவின் யானைத் தந்த விற்பனைத் தடைக்கு இலங்கை மிருக நல ஆர்வலர்கள் வரவேற்பு

சீனாவின் யானைத் தந்த விற்பனைத் தடைக்கு இலங்கை மிருக நல ஆர்வலர்கள் வரவேற்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சீனாவின் யானைத் தந்த விற்பனைத் தடைக்கு இலங்கை மிருக நல ஆர்வலர்கள் வரவேற்பை வெளியிட்டுள்ளனர். உலகின் அனைத்து நாடுகளும் சீனாவை முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர். இலங்கையின் சுற்றாடல் வள ஆர்வலர்கள் மற்றும் மிருக நல ஆர்வலர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். யானைத் தந்தங்கள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் உற்பத்தி விற்பனைகளை தடை செய்வதன் மூலம் யானைகள் கொல்லப்படுவதனை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இலங்கையை மையமாகக் கொண்டு யானைத் தந்தங்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் இந்த தீர்மானம் பல்வேறு நலன்களை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More