Home இலங்கை பூநகரி விபத்தில் ஒருவர் பலி சந்தேகநபரை காப்பாற்றும் முயற்சியில் காவல்துறையினர்?

பூநகரி விபத்தில் ஒருவர் பலி சந்தேகநபரை காப்பாற்றும் முயற்சியில் காவல்துறையினர்?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பூநகரி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட செல்லையாதீவு சந்தி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி யிலிருந்து பூநகரி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பூநகரி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ஒரு நபர் காவல்துறையினருக்கு வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக குறித்த விபத்து பார ஊர்த்தியுடன் மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் காவல்துறை தரப்பு சாட்சியாக இருந்த பார ஊர்த்தி சாரதியை கைதுசெய்துள்ளனர். பார ஊர்த்தியையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் காவல்துறையினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்

சம்பவ இடத்தில் இருந்த நபர் தெரிவிக்கையில் குறித்த விபத்தை தான் பார்க்கும் போது பார ஊர்தியில் அடிப்பட்டதற்கான தடயங்களும் காயங்களும் இருந்ததாகவும் இதனை தான் காவல்துறையினருக்கு தெரிவித்திருந்ததாகவும் உடனே தானது வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது இடையில் வருகைதந்த நோயாளர் காவுவண்டிக்கு மாற்றிவிட்டு அவரது உடைமைகள் இருப்பதனை தெரிவித்து விட்டு சென்றதாக தெரிவித்தார்

இவ் விபத்தில் மர்மம் இருப்பதாக் சந்தேகம் வெளியிட்ட குடும்பத்தார் காவல்துறையினர் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற முயல்வதாகவும் தெரிவித்து காவல்துறையினருடன் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி மற்றும் கிளிநொச்சி  காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More