Home இலங்கை யாழில்.மற்றுமொரு மாணவனின் உயிரையும் எடுத்தது பட்டம் :

யாழில்.மற்றுமொரு மாணவனின் உயிரையும் எடுத்தது பட்டம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பட்டத்தில் மின் குமிழை ஒளிரவிட்டு பட்ட ஏற்றிய மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு அரசடி பகுதியில் இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த சம்பவத்தில் அதேஇடத்தை சேர்ந்த பாஸ்கரன் தர்சன் (வயது 19) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

பட்டம் ஏற்றும் போது மின்குமிழை பட்டத்துடன் இணைந்து ஏற்ற மாணவன் முயன்றுள்ளார். அதன் போது பட்டம் மின் கம்பத்தில் சிக்கி மின் வயரில் சிக்குண்டது. அந்நேரம் பட்டத்தில் மின் குமிழை இணைந்த வயர் ஊடாக மின் சாரம் மாணவனை தாக்கியுள்ளது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் நின்ற உறவினர்கள் விரைந்து செயற்பட்டு மின் தாக்கத்தில் இருந்து மாணவனை காப்பாற்றி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர். இருந்த போதிலும் மாணவனை காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்ண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் சனிக்கிழமை பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் வீட்டிற்கு அருகில் உள்ள வயல் தரவையில் பட்டம் ஏற்ற சென்ற 11 வயது மாணவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More