Home இலங்கை யாழில் போதை பொருள் பாவனை அதிகம் – காவல்துறை அசமந்த போக்கு என வடமாகாண சபை குற்றசாட்டுகின்றது

யாழில் போதை பொருள் பாவனை அதிகம் – காவல்துறை அசமந்த போக்கு என வடமாகாண சபை குற்றசாட்டுகின்றது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.குடாநாட்டில் காவல்துறையினரின் அசமந்த போக்கினால் போதை பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.

அதன் போது , வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் , ‘ யாழில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. காவல்துறையினர் அசமந்தமாக செயற்பட்டு வருகின்றனர். அதனால் வடமாகாண சபை அது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசேட கவனயீர்ப்பு ஒன்றினை சபையில் கொண்டு வந்தார்.

அதன் போது கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன் யாழில் பாடசாலைகளை இலக்கு வைத்து மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவனையை பரப்புகின்றார்கள். அது தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காது அசமந்தமாக செயற்படுகின்றார்கள்.

எனவே அவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து பேசுவதுடன் விசேட காவல்துறை குழுவை நியமித்து போதை பொருள் பாவனையை மாணவர்கள் மத்தியில் பரவ விடாது கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினரான இ. ஜெயசேகரம் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பானவர் எனும் வகையில் முதலமைச்சர் காவல்துறை , கடற்படை மற்றும் மாகாகண சபை உறுப்பினர்களை இணைத்து விசேட கூட்டம் ஒன்றினை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More