Home இலங்கை “என்னுடைய திட்டங்கள் எல்லாற்றையும் நல்லாட்சி தன்னுடைய சாதனை என்கிறது”

“என்னுடைய திட்டங்கள் எல்லாற்றையும் நல்லாட்சி தன்னுடைய சாதனை என்கிறது”

by admin

“எனது ஆட்சிக்காலத்தில் என்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள், அத்திவாரம் இடப்பட்ட கட்டுமானங்கள், ஒதுக்கப்பட்ட நிதி என்பவற்றை பயன்படுத்தி இன்று திறந்து வைக்கப்படும் அனைத்துமே எனது மகிந்த சிந்தனைவயப்பட்டது. இவற்றிற்கு நல்லாட்சி அரசு உரிமை கொண்டாடுகிறது.” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறிப்பாக “மொரகஹகந்த திட்டத்தை இன்று தமது சாதனை என்று நல்லாட்சி அரசு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், உண்மையில் இது எனது ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட திட்டம். ராஜகிரிய மேம்பாலமும் எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டமே”

“நல்லாட்சி அரசின் சாதனைகள்தான் இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய கடன் சுமை நெருக்கடி. ஆட்சிப் பொறுப்பேற்ற 36 இந்த மாதங்களில் மொத்தமாக 14.6 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் இருந்து கடனாகப் பெற்றிருக்கிறது. இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் வாங்கியிராத பாரிய தொகை இது. “மொரகஹகந்த திட்டம் 2005ஆம் ஆண்டு நான் வெளியிட்ட ‘மஹிந்த சிந்தனை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான நிர்மாண வேலைகள் எனது ஆட்சிக் காலத்தில், 2007ஆம் ஆண்டு ஆரம்பமாகிவிட்டது.

“ராஜகிரிய மேம்பாலம் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் உட்பட, பொல்கஹவெல மற்றும் கணேமுல்ல மேம்பாலங்களுக்கான திட்டங்களும் எனது ஆட்சிக் காலத்திலேயே திட்டமிடப்பட்டன. இவற்றுக்கான எனது அனுமதி 2014ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டது. அத்துடன், அத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகளையும் அப்போதே செய்திருந்தேன்.” என, நல்லாட்சி அரசு பதவியேற்ற மூன்றாவது ஆண்டு இன்று நிறைவுறும் நிலையில், அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More