Home உலகம் அல்ஜசீரா நிறுவனத்தின் ஏமன் கிளை துப்பாக்கி முனையில் மூடப்பட்டதற்கு கண்டனம்….

அல்ஜசீரா நிறுவனத்தின் ஏமன் கிளை துப்பாக்கி முனையில் மூடப்பட்டதற்கு கண்டனம்….

by admin


கட்டாருக்கு சொந்தமான அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனத்தின் ஏமன் கிளை அலுவலகத்தை ஏமன் ராணுவம் மூடியதற்கு அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்டாரின் தலைநகரான தோஹா நகரை தலைமை அலுவலகமாக கொண்டுள்ள பிரபல அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனம் அந்நாட்டின் நிதியுதவியுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆசிய கண்டம், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் அதிமுக்கிய சம்பவங்களை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அல் ஜசீரா தொலைக்காட்சி மற்றும் இணையதளம் ஆகியவை வெளியிட்டு வருகின்றன.

அல் ஜசீராவுக்கு சொந்தமான கிளை அலுவலகங்கள் உலகின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அந்நாடுகயில் உள்ள செய்தியாளர்கள் அன்றாட செய்திகள் நிகழ்வுகளை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டாய்ஸ் நகரில் இயங்கிவரும் அல் ஜசீரா கிளை அலுவலகத்துக்கு நேற்று சென்ற அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள் துப்பாக்கி முனையில் அலுவலகத்தை மூட வைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அல் ஜசீரா குழுமம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அல் ஜசீரா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எங்கள் அலுவலகத்தை பலவந்தமாக மூடிய முடிவை அதிகாரிகள் திரும்பப்பெற வேண்டும். எங்களது செய்தியாளர்கள் எவ்வித பாகுபாடும், இடையூறுமின்றி தங்களது கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்துவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அல் ஜசீராவை சேர்ந்த மூன்று பணியாளர்கள் இதே டாய்ஸ் நகரில் கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More