Home இலங்கை குழப்பத்தை தவிர்க்கும் நோக்குடனேயே ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக விளக்கம் கோரினார்

குழப்பத்தை தவிர்க்கும் நோக்குடனேயே ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக விளக்கம் கோரினார்

by admin

விசேட அறிவித்தல்

இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இரு வேறு வகையான கருத்துக்கள் சட்டம், சிவில் மற்றும் அரசியல் துறைகளில் நிலவுகின்றன. இதனால் ஏற்படக்கூடிய குழப்பத்தை தவிர்த்துக்கொள்ளும் நோக்குடன், ஜனாதிபதி அவர்கள் தமது பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதி ஒருவருக்கு அவ்வாறு விளக்கம் கோருவதற்கான அதிகாரம் காணப்படுவதுடன், இதற்கு முன் பதவிவகித்த ஜனாதிபதிகளும் தமது பதவிக்காலம் தொடர்பாக இவ்வாறு உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளனர். இது ஜனநாயக ஆட்சியமைப்பின் அரசியலமைப்பில் காணப்படும் ஒரு விசேட அம்சமாகும்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2018.01.11

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More