Home இந்தியா பினராயி விஜயனுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை…

பினராயி விஜயனுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை…

by admin

ஊழல் வழக்கிலிருந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கில், அவருக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது. கடந்த 1990-களில் பினராயி விஜயன் கேரள மின்துறை அமைச்சராக பதவி வகித்தபோது செயல்படுத்தப்பட்ட 3 நீர்மின் திட்டங்களில் ஊழல் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விஜயன் உள்ளிட்ட10 பேர் மீது சிபிஐ வழக்கு தொடுத்துற்ற நிலையில் இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் விஜயன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்ததுடன் ஏனைய 3 பேருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு விஜயன் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More