Home இலங்கை மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்பு பகுதியில் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் மீது தாக்குதல்…

மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்பு பகுதியில் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் மீது தாக்குதல்…

by admin

மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்பு பகுதியில் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மீனவர்கள் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனைத் தொடர்ந்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி இடம்பெறுவதாக மீன்பிடி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர்; சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் படகுகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது அவர்கள் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது மீன்பிடி திணைக்கள உப காவல்துறை பரிசோதகர் ஒருவரே காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More