Home சினிமா கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்தால் நமக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்

கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்தால் நமக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்

by admin

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் செந்தில் கவுண்டமணியின் ரைமிங் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தானா சேர்ந்த கூட்டம் நீண்ட இடைவேளைக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள செந்தில், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி எனவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் வந்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்த அவர் இந்த இளைஞர் பட்டாளத்தில் தானும் ஒருவனாக நடித்ததில் தானும் இளமையாகவே உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

வைதேகி காத்திருந்தால் படத்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா என்னும் நகைச்சுவை இடம்பெற்றிருக்கும். அதே போல தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் ஒரு காட்சியில் அதை ஞாபகப்படுத்தும்படியான ஒரு நகைச்சுவை இடம்பெற்றிருக்கிறது. கண்டிப்பாக அதை அனைவரும் ரசிப்பார்கள் என நம்புகிறேன் எனத் தெரிவித்த அவர் அந்த காலத்து நகைச்சுவைக்கும் இந்த காலத்து நகைச்சுவைக்கும் நிறைய வேறுபாடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

தற்போது இணையத்தில் நிறைய மீம்ஸ் வருகிறது எனவும் அதில் தாங்கள் நடித்த படத்தின் நகைச்சுவையை வைத்து வைத்த அரசியல்வாதிகளை பயங்கரமாக கலாய்த்து கலக்குகின்றனர் எனவும் தெரிவித்த அவர் தப்பு செய்பவர்களை கேள்வி கேட்கும்படியான அந்த மீம்ஸ்களை பார்த்து ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கவுண்டமணி நல்ல ரைமிங் கலைஞர் எனவும் சரியான நேரத்தில் வசனம் பேசாவிட்டால் ஏற்றுக் கொள்ளமாட்டார் எனவும் தெரிவித்த செந்தில் அவருடன் நடிக்கும் போது, சரியாக கவனமில்லை என்றால் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார் எனவும் அவருடன் சேர்ந்தால் நமக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More