Home இலங்கை பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விசாரணை

பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விசாரணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசாரணை நடத்த உள்ளார். கடந்த 10ம் திகதி ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இந்த மோதல் சம்பவத்துடன் சபாநாயகருக்கு தொடர்பு உண்டு என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு சபாநாயகர் திட்டமிட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டிலும் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மறறும் பாலித தெவரப்பெரும ஆகியோர் பாராளுமன்றிற்கு பிரவேசிப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More