Home இந்தியா இளம் நடிகர் சடலமாக கோவா கடற்கரையில் மீட்பு

இளம் நடிகர் சடலமாக கோவா கடற்கரையில் மீட்பு

by admin


மலையாள இளம் நடிகரான சித்து பிள்ளை உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக கோவா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  மலையாள திகில் திரைப்படமான நடிகர் துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ திரைப்படமே இவரது முதலாவது திரைப்படமாகும். அதன் மூலம் பிரபலமாகிய அவர் அவர் பின்னர் வேறு சில படங்களில் நடித்து வந்தார்.

திருச்சூரில் வசித்து வந்த 27 வயதான நடிகர் சித்து பிள்ளை கடந்த 12ம் திகதி கோவாவுக்கு சென்றநிலையில் கடந்த திங்கள் கிழமை கோவா கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை அவரது தாயார் அடையாளம் காட்டியுள்ளார்.


நடிகர் சித்து பிள்ளை பிரபல மலையாள தயாரிப்பாளர் பிகேஆர் பிள்ளையின் மகன் ஆவார். சித்து பிள்ளையின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More