Home இலங்கை ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபன பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்

ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபன பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்

by admin


இலங்கை வந்திருக்கும் ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளனர். இலங்கையின் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத் துறையின் முன்னேற்றத்திற்கு புலமைப்பரிசில்களை வழங்குதல் மற்றும் மின்சக்தி, கைத்தொழில், விவசாயம் போன்ற பல துறைகளில் இருநாடுகளுக்கிடையில் கூட்டுறவை மேம்படுத்தும் நோக்குடன் ரொசடம் நிறுவனத்தினர் இலங்கை வந்துள்ளனர்.

மின்சக்தி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆய்வு அமைச்சுகளுடன் இணைந்து இதற்காக நீண்டகால, குறுங்கால நிகழ்ச்சித் திட்டங்களை தயாரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்துவரும் உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ரஷ்யா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அண்மையில் தேயிலை ஏற்றுமதி தொடர்பில் எழுந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து இலங்கை நாட்டிற்கும் மக்களுக்கும் வழங்கிய இதய பூர்வமான ஒத்துழைப்பு குறித்து ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி தனது விசேட நன்றியைத் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடரி ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More