Home சினிமா சமுத்திரக்கனியுடன் சண்டை போட்டதை மறக்க முடியாது

சமுத்திரக்கனியுடன் சண்டை போட்டதை மறக்க முடியாது

by admin

சமுத்திரக்கனியுடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டமை மறக்க முடியாத அனுபவம் என நடிகர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி, சமுத்திரக்கனி, இயக்குநர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நிமிர். ஜனவரி 26-ம் திகதி வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் உதயநிதி, நமீதா பிரமோத், பார்வதி நாயர், கருணாகரன், ஜார்ஜ், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசுகையிலேயே உதயநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தெறி படத்திற்குப் பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்திருந்தார் எனவும் நிமிர் படத்தில் மகேந்திரன் சாருடன் இணைந்து நடித்தது பெருமை எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்

சமுத்திரக்கனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் சார் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான காட்சியமைப்புகள் இந்தப் படத்தில் தான்.

நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீதான் நடிக்கிறாய் என்றார். எனக்கே கொஞ்சம் ஷொக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்துவிட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன் என்று அவரிடம் சொன்னேன் என்றார் உதயநிதி.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More