Home இலங்கை இணைப்பு 2 – ஆனைக்கோட்டை மூதாட்டி கொலை – மூவர் கைது

இணைப்பு 2 – ஆனைக்கோட்டை மூதாட்டி கொலை – மூவர் கைது

by admin

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஆனைக்கோட்டை பகுதியில் வசித்த ஜெகநாதன் சத்தியபாமா (வயது 72) எனும் மூதாட்டி அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அதன் போது அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் தோடுகள் என்பன காணாமல் போயிருந்தன.

அதனால் குறித்த கொலை கொள்ளை நோக்குக்காக நடைபெற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

அந்நிலையில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 24 வயதிற்கு உட்பட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

யாழில்.வீட்டில் தனிமையில் இருந்த மூதாட்டி அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

Jan 21, 2018 @ 18:32

ஆனைக்கோட்டை பொன்னையா வீதியை சேர்ந்த 72 வயதுடைய  ஜெகநாதன் சத்தியபாமா  என்பவரே அடிகாயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மூதாட்டி ஊன்றுகோளின் உதவியுடனயே நடமாடுபவர் எனவும், வீட்டில் தனிமையில் இருப்பதனால், பெறாமகன் உணவு கொடுத்து பராமரித்து வருகின்றார் எனவும், இரவு வேளைகளில் மூதாட்டியின் மைத்துனரான வயோதிபர் ஒருவர் மூதாட்டிக்கு துணையாக தங்குவார் என அயலவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வழமை போன்று மூதாட்டிக்கு துணையாக இரவில் தங்கும் வயதானவர், மூதாட்டியின் வீட்டுக்கு வந்த போது வீட்டு மின் விளக்குகள் ஒளிரவிடப்படாது வீடு இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இதனை அடுத்து வயோதிபர் வீட்டினுள் சென்று மின் விளக்குகளை ஒளிரவிட்டபோது, வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் மூதாட்டி அடிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டு உள்ளார்.   தொடர்ந்து குறித்த வயோதிபர் அயலவர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், மானிப்பாய் காவற்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க ப்பட்டது. அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற   காவற்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் போது மூதாட்டி அணிந்திருந்த தோடு மற்றும் மோதிரம் ஆகியவையை காணவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த கொலை நகைகளை கொள்ளையிடும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதா ? எனும் கோணத்திலும் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More