Home இந்தியா ஆண்டாளும் – நித்தியானந்தவும் – சிஸ்யைகளும் – மாக்ஸிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானமும்…

ஆண்டாளும் – நித்தியானந்தவும் – சிஸ்யைகளும் – மாக்ஸிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானமும்…

by admin


நித்யானந்தா ஆசிரமத்தில் 18 வயது நிரம்பாத குழந்தைகள் ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பது குறித்து விரிவான விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுக் கூட்டம் ஜனவரி 23-25 தேதிகளில் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி, மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் பல முக்கிய தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சாமியார் என்கிற போர்வையில் செயல்படும் நித்தியானந்தா பற்றிய தீர்மானம் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா என்கிற பல குற்ற வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டுள்ள சாமியார் என்கிற போர்வையில் செயல்படும் நபரும், அவரது கூட்டத்தினரும் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் உள்ள பவளக்குன்றில் மூவாயிரம் ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலத்தையும், வன நிலத்தையும் ஆக்கிரமிக்க முயற்சித்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்து நிறுத்தியது.


இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தா கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீரபத்திரன் மற்றும் தமுஎகச தலைவர்கள் கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோர் மீது சமூக வலைதளத்தில் மிகவும் தரம் தாழ்ந்த பாலியல் வக்கிரத்துடன் கூடிய தாக்குதலை தொடுத்தது. நித்தியானந்தாவின் அடியாட்களை ஏவி தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபட்டது.

இது குறித்து கடந்த ஆண்டு காவல்துறையில் புகார் செய்யப்படடது. வக்கிரமான வீடியோ நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் காவல்துறை இயக்குநரிடமும் இது குறித்து முறையீடு செய்யப்பட்டது. இன்று வரையிலும் இவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. இந்நிலையில் சமீப காலமாக கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோர் மீதும் அவர்களது குடும்பத்தினரை இணைத்தும் வக்கிரமான வீடியோக்களை வெளியிட்டு அட்டூழியம் செய்து வருகின்றனர். அந்த வீடியோக்களில் பேசுபவர்கள் 18 வயது கூட நிரம்பாத இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இத்தகைய குழந்தைகள் பொதுவெளியில் காதால் கேட்க கூசுகிற வார்த்தைகளையும், சொல்லாடல்களையும் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. அந்த காணொளிகள் பாலியல் வக்கிரத்தோடு அமைந்துள்ளதோடு சம்பந்தப்பட்ட கருப்பு அன்பரசன், வெண்புறா சரவணன், குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சமீப காலமாக நித்தியானந்தா கும்பல் தியானத்திற்கு அழைத்து வந்த ஆண் – பெண் குழந்தைகளை பெற்றோர்களுடன் அனுப்ப மறுப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

எனவே காவல்துறை சம்பந்தப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வயது சோதனை நடத்த வேண்டுமென்றும், அவர்களது பாதுகாப்பு குறித்தும், அவர்கள் அங்கு கொண்டு வரப்பட்ட சூழல் குறித்தும், அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நித்தியானந்தா கும்பல் கை வசம் உள்ள நிலங்களின் உரிமை குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது என மார்க்சிஸ்ட் கட்சி, மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More