மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சுவிட்சலாந்தின் ரொஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்றையதினம் நடைபெற்ற ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டத்தின் போது ரொஜர் பெடரர் கொரிய வீரரான சங் ஹயோன்ஐ (Chung Hyeon) ஐ எதிர்கொண்ட நிலையில் முதல் இரு செட்களையும் கைப்பற்றியிருந்தார்.
இந்தநிலையில் உபாதை காரணமாக சங் போட்டியில் இருந்து இடையிலேயே விலகினார். இதனைத் தொடர்ந்து பெடரர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை டைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ரொஜர் பெடரர் – மரின் சிலிச்சுடன் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment