Home சினிமா அனுஷ்காவுக்காக 5 வருடங்கள் காத்திருந்த அந்த நபர் யார்?

அனுஷ்காவுக்காக 5 வருடங்கள் காத்திருந்த அந்த நபர் யார்?

by admin


நடிகை அனுஷ்காவுக்காக இயக்குனர் ஒருவர் 5 வருடங்கள் காத்திருந்திருக்கிறார். அஷோக் இயக்கத்தில் அனுஷ்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்துள்ள பாகமதி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனா நடித்துள்ளார்.

2013ம் ஆண்டின் ஆரம்பத்தில் தான் அனுஷ்காவிடம் பாகமதி படம் பற்றி தெரிவித்ததாகவும் அவரும் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்த போதும் பாகுபலி மற்று ருத்ரமாதேவி படங்களில் ஏற்கனவே நடிக்க ஒப்பநதமாகியிருந்ததால் 5 வருடங்கள் காத்திருந்தேன் என இயக்குனர் அஷோக் தெரிவித்துள்ளார்.

பாகமதி படத்தில் வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்பதனால் 5 வருடங்கள் ; அவருக்காக காத்திருந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.   பாகமதி மீதும், தன் மீதும் நம்பிக்கை வைத்திருந்ததால் அனுஷ்கா 5 ஆண்டுகள் கழித்தும் தன் படத்தில் நடித்தார் எனவும் அதற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் எனவும் அஷோக் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More