Home இலங்கை தேர்தல் வன்முறைகள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்க விசேட பிரிவு…

தேர்தல் வன்முறைகள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்க விசேட பிரிவு…

by admin

தேர்தல் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து கண்டறியும் நோக்குடன் இந்த விசேட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற நிலையில் வன்முறைச் சம்பவங்கள்இது தொடர்பாக பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விசேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

24 மணித்தியாலங்களும் செயற்படுகின்ற 0773 088 135 அல்லது 0773 762 112 என்ற இலக்கங்களுக்கு அல்லது த 0112 505 574 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More