வேலூரில் தனியார் பாடசாலை ஒன்றின் ஆண்டு விளையாட்டு விழாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, பாடசாலை தாளாளர் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விளையாட்டு மைதானத்தில் சுமார் 600 மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் எரிவாயு சிலிண் டர் மூலம் பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி இடம்பெற்ற போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment