Home இலங்கை அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரிய கோதபாயவின் மனு நிராகரிப்பு

அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரிய கோதபாயவின் மனு நிராகரிப்பு

by admin


அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஸ தாக்கல் செய்த மனு கொழும்பு மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவன்ட் கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோதபாய உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்குத் தாக்கல் செய்வதற்கு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரால், ஆணைக்குழுவிடம் இருந்து எழுத்து மூல கோரிக்கை பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் இது சட்டவிரோதமானது எனவும் கோதபாய தனது மனுவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More