Home இந்தியா விஜய் மல்லையா வாங்கிய கடன் தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லை – நிதி அமைச்சு

விஜய் மல்லையா வாங்கிய கடன் தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லை – நிதி அமைச்சு

by admin


வங்கிகளில் கடன் பெற்று தற்போது லண்டனில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா, வாங்கிய கடன் தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லை என இந்திய மத்திய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.  டெல்லியைச் சேர்ந்த ராஜீவ் குமார் காரே என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிதி அமைச்சிடம் விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய நிதி அமைச்சு இவ்வாறு பதில் அளித்துள்ளது

விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் அளவு குறித்த எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை எனவும் அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள், கடனுக்காக வங்கிகளுக்கு உத்தரவாதம் அளித்தார்கள் உட்பட எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More