குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இவ்வாறு சந்திப்பு நடத்துகின்றனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வரலாறு காணாத தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இவ்வாறு சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டு வருகின்றது. மீளவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமென சில தரப்பினர் ஆலோசனை முன்வைத்துள்ளனர். இதேவேளை வேறும் சிலர், மஹிந்த ராஜபக்சவிற்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.
Spread the love
Add Comment