குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் பிரதமராக கடமையாற்ற உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சற்று நேரத்திற்கு முன்னதாக பிரதமர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஆட்சியை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் பதவிக் காலம் பூர்த்தியாகும் வரையில் ஆட்சியில் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் பாதக நிலையில் காணப்பட்டாலும், நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் பயணிக்கும் என தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment