Home இலங்கை மஹிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதற்கு சவால். – சுமந்திரன்….

மஹிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதற்கு சவால். – சுமந்திரன்….

by admin

தெற்கில் மஹிந்த அணி பெற்ற வெற்றி தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில்.இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு , தமிழ் தேசிய கொள்கையில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் ஒன்றாக பயணிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது.

வரவிருக்கும் புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்க போகின்றது என்ற அடிப்படையில் அதனை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளார்கள். இந்நிலையில் மகிந்த அணியினரால் தெற்கில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கருத்தில் எடுத்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களை கைவிட்டு ஒரே திசையில் பயணிக்கின்ற நாம் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தலானது தெற்கிலே ஏற்படுத்தியுள்ள மாற்றமானது தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலே பெரிடியாக வந்துள்ளது.

குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற மக்கள் ஆணையாக இத் தேர்தலை சில கட்சிகள் பிரச்சாரம் செய்திருந்தன. அதேபோன்று மகிந்த அணியானது குறித்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாடு இரண்டாக பிளவுபடப்போகின்றது என பிரச்சாரம் செய்த நிலையில் சிங்கள மக்கள் தற்போதுள்ள அரசாங்கத்தை நிராகரிக்கின்ற வகையில் வாக்களித்துள்ளனர்.

குறிப்பாக தெற்கில் ஏற்பட்டுள்ள இம் மாற்றமானது தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More