ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தெரிக் இ தலிபான் இயக்கத்துணைத்தலைவர் காலித் மெஹ்சூத் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பக்திகா மாகாணத்தில் கடந்த வாரம் காலித் மெஹ்சூத் கொல்லப்பட்டதாக தற்போது அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது.
காலித் மெஹ்சுத்தின் பதவிக்கு கமாண்டர் முப்தி நூர் வாலி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் ஹக்கானி தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment