Home இலங்கை “அவர் ஒரு மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை”

“அவர் ஒரு மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை”

by admin

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற் கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­க்கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை. இந்த ஒத்­து­ழைப்பை அவர் நல்­க­வேண்டும்  என்று,  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன்  தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களை தொடர்ந்து வெற்றி பெற்ற  வேட்­பா­ளர்கள் மற்றும் ஏனைய வேட்­பா­ளர்கள் ஆத­ர­வா­ளர்கள் ஆகி­யோரை அழைத்து தனது இல்­லத்தில்  நேற்று  கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன்  கலந்­து­ரை­யா­டினார்.  இதன்­போது ஊடா­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது தேசிய அர­சாங்­கத்­திற்கும், முன்னாள் ஜனா­தி­பதி ராப­க்ஷ­வுக்கும் எவ்­வி­த­மான சம்­பந்­தமும் இல்லை. தேசிய அர­சாங்­க­மா­னது தனது கொள்­கையின் அடிப்­ப­டையில் ஆரம்­பிக்­கப்­பட்ட பணி­களை தொடர வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

 குறிப்­பாக புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்தை  தேசிய அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்டும். ராஜ­ப­க்ஷவின்  அனு­ம­தியை பெற்று தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­ட­வில்லை. இந்த  அர­சாங்கம் ஆனது கணி­ச­மான தூரம் பயணம் செய்­துள்­ளது. அது முடி­வ­டையும் வரையில் எவ்­வித மாற்­றமும் ஏற்­பட முடி­யாது.

முன்னாள் ஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற்­கின்றோம். அவரை  எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. ஏலவே நான் பாரா­ளு­மன்­றத்தில் பல­த­ட­வைகள் இதனைக்   கூறி­யி­ருக்­கின்றேன். நீங்கள் மதிப்பு பெற்ற தலைவன் என்றும், ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு உங்கள் ஒத்­து­ழைப்பு தேவை என்றும், அந்த ஒத்­து­ழைப்பை நல்க வேண்டும் என்றும், கேட்டுக் கொள்­ளு­கின்றேன்.

கரங்­களைப் பலப்­­டுத்­தி­யுள்­ளது

உள்­ளூ­ராட்சி சபை தேர்­தலில் வட­கி­ழக்கில் நாங்கள் அடைந்த வெற்றி எங்கள் கரங்­க­ளைப பலப்­ப­டுத்­தி­யுள்­ளது. உங்கள் ஒத்­து­ழைப்பை நீங்கள் நல்­க­வேண்டும். தேசிய பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். தேசிய பிரச்­சி­னையை தீர்ப்பேன் என்று அன்று வாக்­கு­றுதி அளித்­தீர்கள். சர்­வ­தே­சத்­திற்கும், சர்­வ­தேச தலை­வர்­க­ளுக்கும், ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்­திற்கும் அந்த வாக்­கு­று­தி­களை நீங்கள் நல்­கி­னீர்கள் ஆனால் அவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அவ்­வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இனி­ய­வது நீங்கள் ஒத்­து­ழைப்பு நல்­க­வேண்டும் என்று கேட்டுக் கொள்­ளு­கின்றேன்.

ஒற்­று­மையை பலப்­­டுத்த வேண்டும்

வட­கி­ழக்கில் பல­மான ஆட்­சியும் அதி­கா­ரமும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மாயின் ஏனை­ய­வர்­க­ளு­டனும், நாம் சேர்ந்து இயங்க வேண்டும். அவ்­வாறு இயங்­கு­வ­தற்கு நான் ஒரு­போதும் பின் நிற்­க­மாட்டேன். மக்கள் நலன் கரு­தியும், சேவை கரு­தியும் ஒற்­று­மையை நாங்கள் பலப்­ப­டுத்த வேண்டும். அதி­கா­ர­முள்ள ஒரு ஆட்­சியை அமைப்­ப­தற்கு நாம் எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கையை எடுக்க நான் பின்­நிற்க மாட்டேன். ஆனால் வட­கி­ழக்கில் உள்ள உள்­ளூ­ராட்சி சபை­களில்  எந்தக் கட்­சி­யுடன் நாங்கள் கூட்டுச் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்­க­வேண்டும் என்­பதை கவ­ன­மாக கலந்து ஆலோ­சிக்க வேண்டும்.  எமது கொள்­கைக்கு மாறாத கட்­சி­க­ளாக அவை இருக்­க­வேண்டும்.

நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலில் மகிந்­தவின் பொது­ஜன பெர­முன கூடு­த­லான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ளது. அவரை எதிர்த்த ஐக்­கிய தேசியக் கட்சி 32வீதம் வாக்­கு­க­ளையும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு, சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி 13வீதம் வாக்­கு­களை பெற்­றுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி உட்­பட மகிந்­த­விற்கு எதி­ரான கட்­சிகள் 45 வீதம் வாக்­கு­களை பெற்­றுள்­ளன. ஜே.வி.பி 5வீதம் வாக்­கு­களை பெற்­றுள்­ளது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அகில இலங்கை ரீதியில் 3வீதம் வாக்­கு­களைப் பெற்­றுள்­ளது. ஒப்­பீட்டுப் பார்க்­கையில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிரிசேன  அவர்கள் 51வீதத்­திற்கு மேற்­பட்ட வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தார். மகிந்த ராஜ­பக்ஷ‘ ஜனா­தி­பதி தேர்­தலில் பெற்ற வாக்­கு­க­ளை­விட நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலில் குறைந்­த­ளவு வீதத்­தையே பெற்­றுள்ளார்.

தேசிய பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அம்­மு­யற்­சியில் நாம் ஈடு­பட்டு வரு­கின்றோம். தேர்தல் முடிந்­ததும் தாமதம் இல்­லாமல் அர­சியல் சாசன முன்­னெ­டுப்­புக்கள் நடை­பெற வேண்டும் என  நாம் எதிர்­பார்க்­கின்றோம். குறிப்­பாக இவ்­வ­ருட முடி­வுக்குள் அது நிறைவு பெற வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பும் கோரிக்­கையும் ஆகும். இதற்கு இலங்­கையில் உள்ள எல்லாக் கட்­சி­களும், எல்லாத் தலை­வர்­களும், பூர­ண­மான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க  வேண்டும்.  நியா­ய­மான நிரந்­த­ர­மான தீர்வு ஏற்­ப­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆகிய மூவரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என வேண்­டு­கின்றோம். பிரிப்­ப­டாத நாட்­டுக்குள், ஒன்­றுப்­பட்ட தேசத்­திற்குள், அந்த தீர்வு அதி­காரப் பலன் கொண்­ட­தாக இருக்­க­வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும். இதற்கு எல்­லோரும் ஒத்­து­ழைக்க வேண்டும்.

தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­ளவில் எவ­ரையும் நாம் அர­சியல் எதி­ரி­க­ளாக பார்க்­க­வில்லை. எல்­லோ­ரையும் நாட்டின் தலை­வர்­க­ளாக மதிக்­கின்றோம். அவர்கள் உள்­ளக சுய நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான ஒரு­மித்த நாட்­டுக்குள் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வை நல்­க­வேண்டும் என்றே தமிழ் மக்கள் கோரு­கின்­றார்கள். அவ்­வா­றான ஒரு தீர்­வா­னது அர்த்­த­புஷ்டி உள்ள தீர்­வாக இருக்க வேண்டும். இக்­க­ருத்­துக்­களை எலவே நாட்­டி­லுள்ள தலை­வர்கள் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்­பா­னது இத்­தேர்­தலில் பெருந்­தொ­கை­யான இடங்­களில் போட்­டி­யிட்­டது அனே­க­மான சபை­களில் கூடு­த­லான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ளது. பெரும்­பான்மை பெறாத சபை­களில் கூட குறிப்­பாக வட­மா­கா­ணத்தில் ஏனைய கட்­சி­க­ளுடன் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வ­ரையில் சமஷ்டி முறை­யி­லான தீர்வை எதிர்­பார்க்­கின்­றார்கள். அதையே அவர்கள் நீண்­ட­கா­ல­மாக கோரி வந்­தி­ருக்­கி­றார்கள். ஏனைய கட்­சி­களை ஆத­ரித்த மக்கள் கூட இக்­கோ­ரிக்­கையே ஆத­ரிக்­கின்­றார்கள் என்­பதே அறி­யப்­பட்ட விடயம். ஆகையால் அர்த்­த­புஷ்டி உள்ள ஒரு அர­சியல் தீர்வை அரசு விரைவில் தர­வேண்டும் என வட­கி­ழக்கு மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள்.

திருக்­கோ­ண­மலை நக­ர­ச­பையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு 9 ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. அதே போல் நக­ரமும் சூழலும் பிர­தேச சபையில் 7 ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. இவ்­விரு சபை­க­ளிலும் அதிக ஆச­னங்­களை பெற்ற ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பாகும். அதே போன்றே வெருகல் பிர­தேச சபையில் 6 ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. மூதூர் பிர­தேச சபையில் 5 உறுப்­பி­னர்­க­ளையும் குச்­ச­வெளி பிர­தேச சபையில் 3 ஆச­னங்­களைப் பெற்று இரண்டாம் இடத்­திலும், தம்­ப­ல­காமம் பிர­தே­சத்தில் 2 ஆச­னங்­க­ளையும், முத­லிக்­குளம் பிரதேசத்தில் 1 ஆசனமும், கிண்ணியா நகரசபையில் 1 ஆசனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ளது.

திருக்கோணமலை மாவட்டத்தில் 10 பிரதேச சபைகளில் நாம் போட்டியிட்ட போதும் 9 பிரதேச சபைகளில் நாங்கள் உறுப்பினர்களை பெற்றுள்ளோம். கந்தளாய் பிரதேச சபையில் அவ்வாறான ஒரு வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. திருக்கோணமலை மாவட்டத்தில் 3 சபைகளில் ஆட்சியமைக்கும் பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது மாத்திரமன்றி அதிகூடிய உறுப்பினர்களை பெற்ற ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை இத்தேர்தல் நிரூபித்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். (வீரகேசரி)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More