Home இலங்கை நல்லிணக்க அரசாங்கம் தொடரும் – UNP – தேசிய அரசை விட்டு செல்கிறோம் SLFP – என்ன நடக்கிறது?

நல்லிணக்க அரசாங்கம் தொடரும் – UNP – தேசிய அரசை விட்டு செல்கிறோம் SLFP – என்ன நடக்கிறது?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

தேசிய அரசாங்கத்தை இருந்து  விலகிக் கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தீர்மானித்துள்ளார்கள் என கொழும்பில் இருந்து வெளியாகும் இரவு செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஒரு புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாக அமைச்சர் திலங்க சுமத்திபால  தெரிவித்துள்ளார்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைப்பில் தற்போது  நிலவும்  நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுப்பதே ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் எட்டப்பட்ட இறுதித் தீர்மானமென ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில்  பிரதமர் தெரிவித்ததாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால நடடிவக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேசுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று இரவு 6.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்ட பிரதமர், ஜனாதிபதியுடன் பேசி எடுக்கப்பட்ட தீர்மானங்களை, அலரி மாளிகையில் இருந்து  ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் அறிவித்தார்.

இக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதே தமதும் ஜனாதிபதியினதும் இறுதித் தீர்மானமாக அமைந்ததாக  அமைச்சர் சுஜீவசேனசிங்க  குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More