குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி மக்கள் அளித்த ஆணையை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சுயாதீனமாக தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு பிரதமரும் ஜனாதிபதியும் இணக்கத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் இந்த சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment