Home இலங்கை மட்டக்களப்பு மாநகர மேயர் தெரிவுக்கான கலந்துரையாடல்…

மட்டக்களப்பு மாநகர மேயர் தெரிவுக்கான கலந்துரையாடல்…

by admin

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயரைத் தெரிவு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் மேயர் தெரிவு தொடர்பில் வெற்றியீட்டிய மாநகர சபையின் உறுப்பினர்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் பெறப்பட்டதுடன் அவர்கள் மூலமாகவே மேயர் தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேயர் தெரிவு தொடர்பில் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படுமென கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More