Home இலங்கை செப்டம்பரில் மாகாணசபைத் தேர்தல்?

செப்டம்பரில் மாகாணசபைத் தேர்தல்?

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாக உள்ளநிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வடமத்திய, கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாண சபைகள் ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ளதாகவும் தாமதமின்றி தேர்தல்களை நடாத்துவதே தமது பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தொகுதிவாரி அடிப்படையில் தெரிவான மொத்த உறுப்பினர்களில் 10 வீதமானவர்கள் பெண்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1.9 வீதமான பெண்கள் மட்டுமே வெற்றியீட்டியிருந்தனர் எனவும், இம்முறை அதிகளவில் பெண்கள் தெரிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விகிதாசார முறையில் இம்முறை மேலும் பெண்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு உள்வாங்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் குறிப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More